தமிழக வெற்றி கழகம் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும். ஆனால் வேகம் இருக்காது. ஆர்ப்பரிக்கும் இந்தக் கூட்டம் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வரவேண்டும் என்று கூறுகின்றது. பெரும்பாலான அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வருபவர்கள் 1 அல்லது 2 மணி நேரத்தில் எழுந்து சென்று பாதி நாற்காலிகள் காலியாக இருக்கும். ஆளும் கட்சியை மற்றும் எதிர்க்கட்சி தேவையில்லை நம்முடைய தலைவர் தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று இளைஞர்கள் வருகிறார்கள்.
இந்த கூட்டத்தை எந்த ஒரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். வழி தெரியாமல் இருக்கின்ற பொழுது நமக்கு வழிகாட்டியவர் விஜய். இன்றைக்கு சொல்கிறேன், என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்கு தான், கேட்காமலே நமக்கு கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்துள்ளார்.
அவர்தான் நம்முடைய வெற்றி தளபதி. ஜெயலலிதா உடன் பயணித்த போது நான் ஒருவரை அடையாளம் காட்டினேன், ஆனால் அவர் இன்று என்னை அடையாளம் காட்டி விட்டு சென்று விட்டார். நல்ல இடத்திற்கு போங்கள் என அடையாளம் காட்டியுள்ளார். இதனால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவருடன் பயணித்திருந்தால் நான் பின்னோக்கிச் சென்று இருப்பேன். இப்போது விஜய் உடன் சேர்ந்து முன்னோக்கி செல்கின்றேன் என செங்கோட்டையன் பேசியுள்ளார்
