தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனிடையே அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் டிசம்பர் 31ஆம் தேதி குழு கைவிரல் ரேகை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று உடனே கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் பணியில் இருப்பவர்கள் ரேஷன் கார்டு நகலுடன் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
