அம்மா இறந்துட்டாங்க..! இறுதி சடங்கு செய்ய பணம் இல்ல… ஜிவி பிரகாஷை ஏமாற்றி பணம் பறித்த நபர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்பவர் ஜி.வி. பிரகாஷ். இசையமைப்பாளர், நடிகர் எனச் சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர், யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாகத் தன்னால் முடிந்த பண உதவியைச் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், எக்ஸ் பக்கத்தில் இருந்து ஜி.வி. பிரகாசுக்கு உதவி கேட்டு ஒரு பதிவு வந்தது. அந்தப் பதிவில், “எங்களுக்குச் சிறுவயதிலேயே அப்பா இல்லை.

அம்மா தான் வேலைக்குச் சென்று எங்களைப் படிக்க வைத்தார். இப்போது என் அம்மாவும் இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு நடத்துவதற்குப் பணம் இல்லை; இதனால் நானும் என் தங்கையும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். அம்மாவிற்கு இறுதிச் சடங்கு செய்ய உதவி செய்யுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

   

இதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஜி.வி. பிரகாஷ், அந்த நபரின் தொலைபேசி எண்ணைப் பெற்று 20,000 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் தான் செய்த பண உதவியின் ஆதாரத்தை இணையதளத்தில் பகிர்ந்தார். அதனைப் பார்த்துப் பலரும் அந்த நபருக்குப் பணம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், தனது அம்மா இறந்துவிட்டதாக அந்த நபர் பதிவிட்ட வீடியோ, 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதும், அந்த வீடியோ ஏற்கனவே யூடியூபில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஜி.வி. பிரகாஷ் ஏமாற்றப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் ஆதாரத்தோடு பதிவிடப்பட்டு வருகிறது. இது போன்ற மோசடி நபர்களால், உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.