தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமல்லாமல் ரொக்க பணமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு மட்டும் வழங்கப்பட்ட நிலையில் ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று இபிஎஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வலியுறுத்துகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினின் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் பெரிய கருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
