தமிழகத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் இன்றுடன் தேர்வு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24 நாளை முதல் தொடர்ந்து 12 நாட்கள் ஜனவரி 4 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களின் உற்சாகத்திற்கு இன்று எல்லையை கிடையாது. 1 – 12 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்றுடன் அரையாண்டு தேர்வு நிறைவடைந்து நாளை முதல் 12 நாட்கள் விடுமுறை தொடங்குகிறது.
விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்கூட்டியே பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
