தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு… அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love
தமிழ்நாடு அரசு அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, தனியார் பள்ளிகளில் சில நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் காலை வணக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண்ணை மாணவர்கள் தாங்களே நேரடியாகப் பாட வேண்டும்.
ஒலிபெருக்கி அல்லது வேறு மின்னணுக் கருவிகள் மூலம் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது. நாளை விடுமுறை நாள் என்பதால், இந்த விதிமுறைகள் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இந்த உத்தரவு தமிழ் மொழி மற்றும் தேசிய உணர்வை மாணவர்களிடையே வளர்க்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.