விடுதலை 2 படத்தை தொடர்ந்து, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படம் உருவாகிறது. தக்லைஃப் படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் இப்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, அரசன் படம் குறித்து கூறியிருக்கிறார்.
அப்போது நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, அரசன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி எனக்கே என்னவென்று தெரியாது. வெற்றிமாறன் சார் கதையை எழுதும்போது அவர் எழுதிய கதாபாத்திரத்திற்காக என்னை நினைவில் வைத்து எழுதியதாக சொன்னார். அவர் அப்படி சொன்ன உடனே நானும் ஓகே சொல்லிவிட்டேன். எத்தனை நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று கூட எனக்குத் தெரியாது என்று விஜய்சேதுபதி அந்த விழாவில் கூறியிருக்கிறார்.
