திருவையாறு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) துரை சந்திரசேகரன் பயணித்த கார் மோதிய விபத்தில், சென்னமானாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரத்தநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, வயல் வேலைக்காகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கோவிந்தராஜ் மீது, எம்.எல்.ஏ-வின் கார் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
