தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகளும் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டும்தான் வந்து சேருகிறது. இதனால் ரேஷன் கார்டில் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டுமென அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இ-கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இதனை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விரல் ரேகையை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ரேகையை பதிவு செய்யாதவர்கள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
