மோத வந்ததால் முறைத்து பார்த்த தமிழக வாலிபர்… “கன்னடம் பேசு…” கடுமையாக தாக்கிய கும்பல்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 15, 2025

Spread the love

பெங்களூரு அத்திபெலேயில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில், தனியார் சுற்றுலாப் பேருந்தில் வந்த தமிழ் இளைஞர் ஒருவர், அங்கிருந்த ஒரு கும்பலால் “கன்னடம் பேசு… கன்னடம் பேசு…” என்று கூறித் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் வீலிங் செய்தபடி வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், கழிவறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அந்தத் தமிழ் இளைஞர் மீது மோதச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர் அவர்களைத் திரும்பிப் பார்த்ததால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், அவரை நோக்கி “ஏய்! கன்னடம் பேசு” என்று தகராறு செய்துள்ளது. அவர் சுற்றுலாப் பயணி என்பதையும், அவர் தமிழ் பேசுபவர் என்பதையும் அறியாமல்,பேருந்தில் ஏறி அவரைத் தாக்கியுள்ளனர்.

   

இந்தச் சம்பவம் குறித்துக் கன்னடப் பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டு, இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். “பெங்களூரில் பல வருடங்கள் வசிப்பவர்கள் கன்னடம் பேசவில்லை என்றால் கேட்கலாம். ஆனால், சுற்றுலாப் பயணியிடம் கன்னடம் பேசும்படி வற்புறுத்துவது தவறு” என்று அவர் கூறியுள்ளார்.

   

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் டிசம்பர் 13, 2025 அன்று இரவு 12.20 மணியளவில் அத்திபெலே பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது. வீலிங் செய்து தகராறில் ஈடுபட்ட அந்த இரண்டு நபர்கள் மீதும் பெங்களூரு போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.