வீடு தேடி வரும் பொங்கல் பரிசு ரூ.5000… அமைச்சர் ஐ.பெரியசாமியின் அதிரடி பதில்… தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு, பொங்கல் பரிசுத் திட்டம் மற்றும் 2026 தேர்தல் ஆகியவற்றை குறித்த பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கைக்கு பதில் அளித்த போது, பொங்கல் பரிசு குறித்து முடிவு எடுப்பது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான். மக்களுக்கு தேவையான அனைத்தையும் முதல்வர் சரியாக செய்வார்.

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற கூற்றை நிராகரித்த அமைச்சர், அதிமுக போட்டியிட 210 தொகுதிகள் எங்கே உள்ளது? அதிகபட்சம் 24 தொகுதிகளைப் பெற முடியுமே தவிர இதை தாண்டி எதுவும் இல்லை என்று கிண்டலாக பதிலளித்தார். கிராமப்புறங்களில் மேம்பாட்டு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். ஏழை மக்களுக்காக சுமார் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 20 ஆண்டுகள் பழுது பார்த்து வராத 1.25 லட்சம் வீடுகளுக்கு 2000 கோடி நிதி ஒதுக்கி புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.