உக்ரைனைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ரோமன் ஒலெக்சிவ், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை, போரின் கொடூரமான விளைவுகளை உலகிற்கு உணர்த்தியது. ரஷ்ய தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, 36 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் வாழ்க்கையைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் அந்தச் சிறுவன், தனது துயர அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவை அங்கிருந்த அனைவரையும் உலுக்கின. ஜூலை 14, 2022 அன்று வின்னிட்சியாவில் நடந்த ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த அவர், தனது தாயை இழந்த துயரத்தை விவரித்தார்.
<
💔 Interpreter breaks down in the European Parliament while translating for 11-year-old Ukrainian boy
The child, who was badly injured, recalled how he and his mother came under a Russian strike in Vinnytsia.
“It was the last time I saw my mother and could say goodbye to her,”… pic.twitter.com/HeB9DIUzrG
— NEXTA (@nexta_tv) December 11, 2025
/div>
என் அம்மாவை கடைசியாகப் பார்த்தது அதுதான், கடைசியாக அவளிடம் விடைபெற முடிந்தது” மருத்துவமனையில் இருந்தபோது மூன்று ரஷ்ய ராக்கெட்டுகள் தாக்கியதாகவும், இடிபாடுகளுக்கு அடியில் தனது தாயின் தலைமுடியைக் கண்டதாகவும் அவர் விவரித்தார். இந்தத் தாக்குதலில் அவருக்கு கடுமையான தீக்காயங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன என்று ரோமன் உருக்கமாகக் கூறினார். என்று அவன் குறிப்பிட்டபோது, உணர்ச்சிவசப்பட்ட மொழிபெயர்ப்பாளர் தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். இந்த நெகிழ்ச்சியான தருணம், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சோகத்திலும், கண்ணீரிலும் ஆழ்த்தியது. அவர் 100 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்தார். 36 அறுவை சிகிச்சைகள் மற்றும் நீண்ட கால மறுவாழ்வுக்குப் பிறகும், ரோமன் பள்ளிக்குத் திரும்பி, நடனம் மற்றும் இசையைத் தொடர்கிறார்
