BREAKING: அவங்கள மட்டும் என்னைக்குமே நம்பாதீங்க… புதுச்சேரியிலும் திமுகவை விட்டு வைக்காத விஜய்… பரபரப்பு பேச்சு…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

தமிழகத்தில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பிறகு விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பேசி வருகின்றார். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றார்.

அதில், புதுச்சேரி அரசு திமுக அரசு போன்றதல்ல. கட்சி பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசும் முதல்வரும் நடந்து கொள்கிறார்கள். புதுச்சேரியை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். புதுச்சேரி மக்கள் திமுகவை நம்ப வேண்டாம். அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள். தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியையும் மத்திய அரசு ஒதுக்க கூடாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துடன் தொழிற் வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் பேசி உள்ளார்.