முகத்தில் சுருக்கம், கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கா?… இனி கவலைய விடுங்க… தக்காளியோடு இந்த 2 பொருளை மட்டும் கலந்து பூசுங்க போதும்…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

வீட்டில் இருக்கும் தக்காளியில் இரண்டு பொருட்களை மட்டும் சேர்த்து பூசினால் சருமத்திற்கு அது ஏராளமான நன்மைகளை கொடுக்கும். குளிர்காலத்தின் தாக்கம் சருமத்தில் விரைவாகவே தெரியும். முகம் வறண்டு, கை மற்றும் கால்கள் வெண்மையாகி உதடுகளும் வடிக்கத் தொடங்குகின்றன. மக்கள் இதனை பொதுவானவை என்று நினைத்து பெரும்பாலும் அப்படியே புறக்கணித்து விட்டாலும் சிலர் முகம் குளிர் காலத்தில் கருமையாகவும் மந்தமாகவும் தரை படிந்ததாகவும் மாறுகின்றது. முகம் மற்றும் தோலில் ஏற்படும் இந்த மாற்றத்தை நீக்க பல வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். தினமும் லோஷங்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் எந்தப் பயனும் கிடையாது.

சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க விரும்பினால் அதற்கு தக்காளி இருந்தால் மட்டும் போதும். தக்காளியின் சில பொருட்களை கலந்து அதனை முகத்திற்கு பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மையை தரும். தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பு நிபுணர் இதனை விளக்கியுள்ளார். குளிர்காலத்தில் நமக்கு தாகம் குறைவாக இருக்கும் மேலும் தண்ணீர் குறைவாகவே கொடுக்கிறோம். இது சருமத்தை உள்ளிருந்து நீரிழப்பு செய்கின்றது. நீர் குறைவாக இருக்கும் போது சருமம் தன்னை பாதுகாத்துக் கொள்ள அதிக மகனின் உற்பத்தி செய்கின்றது.

   

இந்த மெலனின் சில நேரங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படலாம். இதனால் சருமத்தின் நிறம் கருமையாகிவிடும். கூடுதலாக குளிர்ந்த காற்று சருமத்திலிருந்து ஈரப்பதத்தை அகற்றி அதனை மந்தமாக தோற்றமளிக்க செய்கின்றது. எனவே பளபளப்பான சருமத்தை பெற விரும்பினால் உட்புறமாக நிறைய நீர் குடிப்பது அவசியம். இதற்கு உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் சூப் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதற்கு உதவும். ரசாயன கிரீம்களை விட வீட்டு வைத்தியம் என்பது சருமத்திற்கு அதிக நன்மை தரும்.

   

அதற்கு பாதி தக்காளியை எடுத்து அதன் மீது சிறிது கிளிசரின் மற்றும் மெல்லிய சர்க்கரை பொடியை தூவி முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். தக்காளியில் உள்ள லைகோபின் மற்றும் இயற்கை அமிலங்கள் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகின்றன. கிளிசரின் சருமத்திற்கு ஈரப்பதத்தை மீட்டெடுக்கின்றது. சர்க்கரை வறட்சியை குறைக்கின்றது. இவற்றின் ஒருங்கிணைந்த விளைவு சருமத்தை சுத்தப்படுத்தி இயற்கையான பளபளப்பை தருகின்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு நான்கு முறை தடவி வந்தால் முகத்தில் நல்ல மாற்றத்தை காண முடியும்.