திமுகவின் கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் சங்கம் வகித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே அனைத்து தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிட்டு வருகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசுக்கு கணிசமான தொகுதிகளை திமுக ஒதுக்கி வரும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் திமுகவுடன் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. கூட்டணி குறித்தும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் பேசுவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு சமீபத்தில் அறிவாலயம் சென்ற திமுக தலைவர் மற்றும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் இந்த முறை அதிகமான தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. ஆனால் திடீரென்று ராகுல் காந்தியின் வலது கரமாக பார்க்கப்படும் பிரவீன் சக்கரவர்த்தி ரகசியமாக விஜயை சந்தித்து 2 மணி நேரம் பேசி இருந்தார். ஏற்கனவே விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்புகிறார் என்ற செய்தியை வெளியாகி இருந்தது. எனவே திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழகம் பக்கம் செல்லுமா என்ற சந்தேகமும் கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை சந்திக்க யாரோ போனார்கள், அது பற்றி எனக்கு தெரியாது. திமுகவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. பின் கதவு வழியாக செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. மக்களை சந்தித்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்
