சண்டிகர் மாநிலத்தில் ரோஸ் கார்டனில் உள்ள பொதுக் கழிவறைக்குள் இளம் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணி அளவில் கழிவறையிலிருந்து வளரல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கிருந்த ஒரு பெண்ணை கழிப்பறைக்குள் சென்று பார்க்கச் சொன்னார். அங்கு கழுத்தில் ஆழமான மற்றும் கூர்மையான காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தீக்ஷா தாக்கூர் என்ற முப்பது வயது இளம் பெண் ஒருவர் மயக்கமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை உடனே மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பீகார் பணியாளர் தேர்வு ஆணைய விண்ணப்ப படிவம் உட்பட அவரிடம் காணப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இறந்தவர் 30 வயதான தீக்ஷா தா கூர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். முதல் கட்ட விசாரணையில் அவர் தனது கணவரிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த நான்கு மாதங்களாக அந்த பெண் பணம் செலுத்தும் விருந்தினராக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில் அவர் தனது மைத்துணருடன் ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு பதட்ட எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை விடுமுறையில் இருந்து திரும்பி அவர் மதியம் 2 மணி அளவில் அலுவலகத்தில் இருந்து வெளியேறி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். அங்கிருந்து அவர் ரோஸ் கார்டனுக்கு சென்றார். போலீசார் தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திலிருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மன அழுத்தம் ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
