தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயனின் தஞ்சை வீட்டில் 300 சவர நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜயன் 1999 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை நாகை எம்பியாக இருந்தவர்.
