தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் அரசியல் களமும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தனக்கு எதிராக குரல் எழுப்பிய செங்கோட்டையனை இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வை என்ன என்பது உன்னிப்பாக அரசியலில் கவனிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நாளை விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தமிழக வெற்றிக்கழகம் மற்றும் அதிமுக கூட்டணி இனி நடக்காத காரியம் ஆகிவிட்டது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இபிஎஸ்-க்கு எதிரியாக இருக்கும் செங்கோட்டையன் தற்போது தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விட்டால் விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
