கேரள மாநிலம் கொல்லம் அருகே குடிபோதையில் குழந்தைகளின் கண்ணெதிரே மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன் .54 வயதான இவருடைய மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். முந்திரி வியாபார புரோக்கர் ஆன மதுசூதனன் அடிக்கடிமதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைப்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல மதுசூதனன் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது மனைவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் எடுத்து தன்னுடைய மனைவியை தாக்கியதில் பலத்த காயமடைந்த கவிதா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து பயந்து போன குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி பக்கத்து வீட்டில் கூறியுள்ளார்கள். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது கவிதா இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
