தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என இந்திய வானிலையை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், நாளை மறுநாள் புயலாக உருமாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 5% அதிகம் என்றும் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
