நகைக்கடன்… காலையிலேயே வந்த குட் நியூஸ்… RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 23, 2025

Spread the love

பொதுவாகவே நாம் அவசர தேவை என்றால் நம்மிடம் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். நாம் அடகு வைக்கக்கூடிய நகைக்கி பொருத்தவாறு வங்கிகளில் இருந்து நமக்கு கடன் வழங்கப்படும். அதற்கு வட்டி செலுத்தி வரும் பட்சத்தில் வருடத்திற்கு ஒருமுறை அதனை மீண்டும் திருப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அப்படி முயலாவிட்டால் நகைகள் ஏலத்தில் விடப்படும். தற்போது நகைக்கடன் விதிகளில் தொடர்ந்து பல மாற்றங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

அதன்படி தங்க நகை கடனை அதிகரிக்க ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி பச்சைக்கொடி காட்டியுள்ளது. தனிநபர், வீட்டுக் கடன் மற்றும் வாகனம் போன்ற வங்கி கடன்களின் வளர்ச்சியை சம நிலையில் உள்ளது. இதனால் குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்க நகை கடன் பாதுகாப்பானது என்பதால் கிராமப்புறங்களில் இந்த வசதிகள் இல்லாத கிளைகளிலும் இனி நகைக்கடன்களை வழங்க ஸ்மால் பைனான்ஸ்கள் தீவிரம் காட்டுகின்றன. அதற்கு தற்போது ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.