தூத்துக்குடியில் நிகழ்ந்த விபத்தில் மருத்துவ மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த ராகுல், ஜெபஸ்டின், முகிலன் நேற்று இரவு காரில் பயணித்தனர். கடற்கரை சாலையில் ரோச் பூங்கா அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது. டாக்டர் கனவுகளுடன் இருந்த மூன்று மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
