இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத ஒரு நாளை கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. கல்வி சம்பந்தமாக மட்டுமல்லாமல் வங்கி சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்திற்கும் மொபைல் போன் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால் இதனை பாதுகாப்பாக பயன்படுத்தினால் நமக்கு எந்த ஒரு ஆபத்தும் இருக்காது. இன்று பெரும்பாலான நபர்கள் பணம், அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டை ஆகியவற்றை மொபைல் கவரில் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவை மொபைல் போன் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் அறிவதில்லை.
நாம் சார்ஜ் செய்யும் போது, விளையாடும்போது, வீடியோ பார்க்கும்போது அல்லது மற்றவர்களிடம் பேசும் போது அதிகமாக சூடாகி விடுகின்றது. இவ்வாறு சூடாகும்போது ₹ ரூபாய் நோட்டில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற வேதிப்பொருள் மொபைல் வெப்பத்துடன் வினைபுரிந்து வெடிக்கும் நிலையை ஏற்படுத்தும். மொபைல் போனிலிருந்து வெளியேறும் காந்தப்புலத்தை நீங்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் கார்டு போன்றவை தடுப்பதால் வெப்பம் வெளியே செல்ல முடியாமல் வெடிக்கும் நிலைக்கு செல்கின்றது. செல்போன் என்பது நம்முடைய வாழ்வில் முக்கிய கருவியாக இருப்பதால் இதனை தவறாக பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். எனவே ஏடிஎம் கார்டு, அடையாள அட்டை மற்றும் பணம் ஆகியவற்றை பர்ஸ் அல்லது பாக்கெட்டில் வைப்பது தான் சிறந்ததாகும்.
