பண மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முதலீட்டாளர்களிடம் 500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் 100 கோடி நிபந்தனைத் தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அந்த நிபந்தனையை நிறைவேற்ற தவறியதால் அவரை கைது செய்ய இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்ட நிலையில் மீண்டும் சென்னை கோர்ட்டில் ஆஜரான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
