கஞ்சா போதையில் பெண்களை வீட்டுக்கே அழைத்து வந்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த மன்மதன் என்பவர் பன்றி இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனிடையே ஸ்ரீதர் அடிக்கடி வீட்டுக்கு பெண்களை அழைத்து வந்து பெற்றோருடன் சண்டை இட்டு அவர்களை தாக்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த ஸ்ரீதர் தன் பெற்றோரை மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மன்மதன் இறைச்சி வெட்டும் கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலைக்கு பிறகு மகனின் உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தாய் கல்யாணியை மகள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு மன்மதன் தன் வழக்கமான வேலையை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் மன்மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் கல்யாணியையும் போலீசார் கைது செய்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
