+2 மாணவர்களே அலெர்ட்..! இவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!!

By Soundarya on கார்த்திகை 9, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்ட்டது. இந்நிலையில் பள்ளிக்கு முறையாக வருகை தரும் மாணவர்களுக்கே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கடந்த வருடங்களில் பதிவு செய்தும் தேர்வுக்கு வராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி வருகை பதிவு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும். இதன்மூலம் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.