“அம்மா என்னால முடியல, நான் செத்துடுறேன்”… தாயாருக்கு திடீரென போன் போட்ட மகள்…. அடுத்த நொடியே கணவர் வீட்டில் நடந்த துயரம்….!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த செல்வசரண்(25) என்ற டெம்போ டிரைவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா (20) என்ற உறவுக்கார பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தவறாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரேஷ்மாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சரண் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்ததால் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய தாயாருக்கு செல் போன் மூலமாக தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனே நாகர்கோவிலில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். இதனைக் கேட்ட உறவினர்கள் உடனே ரேஷ்மா வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் ரேஷ்மா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

   

உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் திருமணமான ஒன்றை வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது