“பீச்சில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக…” ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்…. அடுத்து நடந்த பயங்கர சம்பவம்….!!

By Devi Ramu on கார்த்திகை 8, 2025

Spread the love

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலை அருகிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு கொடூரமான சம்பவம் நடந்தது. கடற்கரையில் தூங்குவதற்காகச் சென்ற சில பொதுமக்கள், மணலில் ஒரு நபர் மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்டனர். அவரது தலையின் பின்புறம் பயங்கரமான வெட்டுக்காயங்கள் இருந்தன. இதைப் பார்த்து பதறிய பொதுமக்கள் உடனடியாக மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தந்தனர்.

போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, உயிருக்கு போராடிய நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  உயிரிழந்த நபரின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த ஏடிஎம் கார்ட்டைப் பயன்படுத்தி விசாரித்தபோது, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயது அந்தோணி என்பவர்தான் இறந்தவர் எனத் தெரியவந்தது. அந்தோணி ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

   

ஆனால் பட்டினப்பாக்கத்தில் ஒரு பெண்ணுடன் அந்தோணிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்தப் பெண்ணுக்கும் திருமணம் ஆகி பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் நொச்சிக்குப்பத்தில் மீன் விற்று வாழ்கிறார். கடந்த வாரம் இந்தக் கள்ளக்காதல் ஜோடி நெருக்கமாக இருந்தபோது, பெண்ணின் உறவினர்கள் அந்தோணியை கடுமையாக எச்சரித்து அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது பெண்ணின் மகள்களும் அந்தோணியை அடித்ததாகத் தெரிகிறது.

   

நேற்று தனது அக்காவுக்கு குழந்தை பிறந்ததால் அதைப் பார்க்க வருவதாக மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு கள்ளக்காதலியை சந்திக்க அந்தோணி மெரினா கடற்கரைக்குச் சென்றார். அதேபோல் கள்ளக்காதலியும் அந்தோணியை சந்திக்க மெரினா கடற்கரைக்கு வந்தார். இருவரும் நள்ளிரவு வரை கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த சிலர் அந்தோணியை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் கத்தியால் தலையை ஆவேசமாக வெட்டிவிட்டு தப்பினர்.

 

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் நள்ளிரவில் ஆட்டோ டிரைவரின் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.