ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் அண்ணா பதக்கம்… டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

தமிழக அரசு சார்பில் வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது. வீர தீர செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பத்தாளர்கள் மட்டுமே இந்த பதக்கத்தை பெற தகுதியுடையவர்கள். பொதுமக்களில் மூன்று பேருக்கு, அரசு ஊழியர்களில் மூன்று பேருக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயதுவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டது. இது முதலமைச்சரால் 2026 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.