இபிஎஸ் தலையில் பேரிடி… அதிமுகவில் இருந்து விலகும் முக்கிய தலைவர்கள்… பரபரப்பை கிளப்பிவிட்ட செங்கோட்டையன்…!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவுக்கு ஏராளமான போட்டிகள் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை நிலை நாட்டுவதில் இபிஎஸ் கவனம் செலுத்தி வருகின்றார். அதேசமயம் கட்சியில் தனக்கு எதிராக போர் கொடி தூக்கும் நிர்வாகிகளையும் மொத்தமாக கட்சியிலிருந்து இபிஎஸ் தூக்கி வீசுகிறார். சமீபத்தில் கூட செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இபிஎஸ் தரப்பிலிருந்து ஒரு சிலர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக செங்கோட்டையன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். யார் பேசுகிறார்கள் என்ற பெயர் விவரத்தை சொல்ல முடியாது, அது அவர்களுக்கு ஆபத்தானவும் கூறியுள்ளார். இதனால் தற்போது இபிஎஸ் பக்கம் இருக்கும் சிலர் எந்த நேரத்திலும் செங்கோட்டையன் பக்கம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியினர் செயல்பாட்டை இபிஎஸ் தீவிரமாக கண்காணிக்க இருக்கிறாராம்.