புதுச்சேரியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் சென்னை அசோக் நகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு நான்கு பேர் பைக்கில் வந்துள்ளார்கள். அவர்கள் நான்கு பேரும் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை வைத்து பிரகாஷை அவருடைய தோழியின் கண்முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்கள்.
இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். அவரை கொலை செய்தவர்கள் யார்? என்று குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பிரகாஷ் உடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த பெண் தற்போது தலைமுறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
