இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எதற்காக மக்கள் இ சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆதாரில் அப்டேட் செய்கின்றனர்.
இதற்காக ஒரு தனிப்பட்ட கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 1 முதல் ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் போன் நம்பரை மாற்ற ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. இறுதியில் ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்து தரவு சரிபார்க்கப்படும். ஆதாரில் மாற்றங்களை செய்ய 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மேலும் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய 125 ரூபாய் வசூலிக்கப்படும். முன்னதாக இதற்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
