தனது பணத்தைத் திரும்பக் கேட்டதற்காக ஒரு தலித் பெண்ணை சர்பஞ்ச் பிரதிநிதி தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தின் பிருத்விபூர் ஜன்பாத் அருகே உள்ள மானேதா கிராமத்தை சேர்ந்த சாந்தி அஹிர்வார் என்ற பெண், அரசாங்க வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்காக, கிராமத் தலைவரின் கணவரும் பிரதிநிதியுமான ராஜ்குமார் சாஹுவிடம் ரூ.10,000 கொடுத்திருந்தார். ஆனால் வீடு கிடைக்காததால் அப்பெண் தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. பின்னர் சாஹு அவளை நடுரோட்டில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Sarpanch representative beats a Dalit woman when she asks him to return 10k rupees given for a government housing scheme in Madhya Pradesh's Chhatarpur. #MPMews #MadhyaPradesh #FreePressMP pic.twitter.com/iVGoMhsJaa
— Free Press Madhya Pradesh (@FreePressMP) October 23, 2025
உள்ளூர் அதிகாரிகளிடம் அந்தப் பெண்ணின் முறையான புகார் பதிவு செய்யப்பட்ட போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களின் கோபத்தையும் சீற்றத்தையும் ஈர்த்துள்ளது. சர்பஞ்ச் பிரதிநிதியின் வன்முறை மற்றும் துஷ்பிரயோக நடத்தைக்காக அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கடுமையாகக் கோரியுள்ளனர்
