“அம்மா வலிக்குது” வீட்டு வாசலில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற 3 வயது சிறுமி… ஆசைக் காட்டி மோசம் செய்த கொடூரன்…!!

By Soundarya on ஐப்பசி 23, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 3 வயது சிறுமியை ஒரு இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர் அவளை வீட்டின் அருகே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாஜித் கான் என்பவர் 3 வயது சிறுமியை குர்குரே வாங்கித் தருவதாக ஏமாற்றியுள்ளார். இதனால் ஆசையில் அந்த அப்பாவி சிறுமி சாஜித்துடன் சென்றுள்ளார்.

இதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட சாஜித் அந்த சிறுமியை  ஒரு வெறிச்சோடிய வயலுக்கு அழைத்துச் சென்று, அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அந்த  அப்பாவி சிறுமியை அவரது வீட்டின் அருகே இரத்த வெள்ளத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் ஓடி வந்தனர். சிறுமியின் நிலையைக் கண்டதும், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவத்தில் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை கைது செய்தனர்.