பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நேற்று 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். சில இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.