நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் youtube சேனல் ஒன்றில் பேசிய சீமான், நீதிமன்ற செயல்பாடுகளை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறி சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
