வியாழக்கிழமை காலை சுமார் 5:45 மணியளவில் ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குவாலியருக்கு இயக்கப்படும் 22470 வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இருந்த ஐ.ஆர்.சி.டி.சி ஊழியர்களிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் புறப்படுவதற்கு முன்பு நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
IRCTC staffers serving onboard Vande Bharat settle an altercation with dustbin, belt and punches at Nizamuddin station in Delhi. pic.twitter.com/tldenRsRMz
— Piyush Rai (@Benarasiyaa) October 17, 2025
இந்த மோதலின் வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காட்சிகளில், ஊழியர்கள் தோல் பெல்ட்கள் மற்றும் பொது குப்பைத் தொட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதைக் காணலாம். ரயில்வே பிளாட்பாரத்தில் ஒரு நபர் ஒரு குப்பைத் தொட்டியை எடுத்து மற்றொரு நபரை அதன் மூலம் அடிப்பதைக் காணலாம். இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் 22.5K க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. வைரலான இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் எதிர்வினையாற்றியுள்ளனர்.
