அட இத்தன நாள் இது தெரியாம போச்சே… சாலையில் இருக்கும் போர்டில் “பச்சை நிறம்” எதற்கு? “காபி நிறம்” எதற்கு தெரியுமா?… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

பொதுவாகவே நம்மைச் சுற்றியுள்ள சில விஷயங்களிலும் நாம் அறியாத பல மறைமுக தகவல்கள் நிறைந்துள்ளன. ஆனால் அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை வியக்க வைத்துள்ளது. சாலை போர்டுகளில் உள்ள நிறங்களுக்கு பின்னால் ஒரு தனித்துவமான அர்த்தம் உள்ளதை ஒருவர் விளக்கி கூறுகிறார். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், பைக்கில் செல்லும் ஒரு நபர் சாலையோரத்தில் உள்ள போர்டுகளில் இரண்டு விதமான நிறங்களில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதை பார்க்கிறார்.

இதுகுறித்து ஆர்வமாக இணையத்தில் தேடிய போது, பச்சை நிறம் நெடுஞ்சாலை வழித்தடங்களை குறிக்கின்றது என்பதும், பிரவுன் நிறம் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தளங்களை குறிக்கிறது என்பதையும் அந்த நபர் அறிகிறார். அவர் செல்லும் பாதையில் உள்ள போர்டில் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்கள் பிரவுன் நிறத்தில் இருந்தன. இது பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் பாரம்பரிய தளங்கள் ஆகியவற்றுக்கு சிறப்புடைய பகுதிகள் என்பதால் அந்த நிறம் பொருத்தமாக இருந்தது. அதனைப் போலவே சுசீந்திரம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்கள் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. அவை முக்கிய வழித்தடங்கள் என்பதையும் அந்த நபர் விளக்கி கூறியுள்ளார். இந்த சுவாரசியமான தகவல் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Adventure Book | Motorcycle Touring பதிவைப் பகிர்ந்துள்ளார் (@adventurebook.yuvraj)