தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா..? வெளியானது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

By Soundarya on ஐப்பசி 16, 2025

Spread the love

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செலாவது வழக்கம். இதற்காக ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்வார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை அதிகம் என்பதால் அரசு சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களில் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சென்னையிலிருந்து 760 சிறப்பு பேருந்துகளும், பிற மாவட்டங்களுக்கு இடையே 565 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.