விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தான் மருத்துவமனையில் இருந்த போது அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நான் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி.
அன்புமணிக்கு தலைமைப் பண்பு என்பதே இல்லை. ஆடு மேய்க்கும் சிறுவன் கூட அன்புமணி போல் பேசமாட்டான் என்று விமர்சித்துள்ளார்.
