BREAKING: திடீர் திருப்பம்… விஜய்க்கு அடுத்து அதிர்ச்சி… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

கரூரில் விஜய் பிரச்சாரம் நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு செய்ததாக தமிழக வெற்றிக்கழகம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். இதை எடுத்து ஜாமின் கேட்டு அவர் கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கட்சி நிர்வாகிகளின் ஜாமின் மனு அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டு வருவது விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.