நைசாக பேசி அழைத்து சென்ற நண்பர்கள்… காட்டுப்பகுதியில் வாலிபருக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

By Devi Ramu on ஐப்பசி 15, 2025

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியில் சேர்ந்தவர் சூர்யா. இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 4 பேர் சூர்யாவை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றார் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வெள்ளப்பட்டு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு சூர்யா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சூர்யாவின் நண்பர்களை குறித்து விசாரித்தனர். அப்போது மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சூர்யாவை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.