ஐயோ என்னால முடியல… ரயிலில் பயணம் செய்தபோது உதவி கேட்ட பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

இந்தியாவில் ரயிலில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பயணி ஒருவர் தன்னுடைய பயண அனுபவத்தை வீடியோவாக இணையத்தில் பகிர்ந்து உள்ளார். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் முறையாக பாதுகாக்கப்படாமல் அனுமதி இன்றி பலர் அமர்ந்ததால் அவர் முழு பயணத்தின் போதும் அசோகரியம் மற்றும் மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது instagram-மில் வைரல் ஆகி வருகிறது. ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிக்குள் முன்பதிவு செய்யப்பட்ட பெண்களின் இருக்கைகளில் கூட சிலர் நேரடியாக அமர்ந்ததாகவும் இது பயணத்தை மிகவும் சிரமமாகியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

இரவு முழுவதும் கூட்டம் மிகுந்த பகுதியில் அவருடைய இருக்கையின் முன்புறம் சிலர் அமர்ந்திருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. மேலும் சிலர் அவருடைய இருக்கையின் அடிவரையில் கூட அமர்ந்திருந்தனர் என்றும் இது அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். ரயிலின் ஹெல்ப்லைன் 199 என்ற எண்ணை அழைத்தும் சரியான உதவி கிடைக்கவில்லை என்றும் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Neha பதிவைப் பகிர்ந்துள்ளார் (@nehaaaa_8_)