தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தலைமுறைவாக இருந்த தமிழக வெற்றிக்கழகம் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் வெளியே வந்தார். கரூர் சம்பவத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகிய நிலையில் தற்போது கரூர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில் முதல் ஆளாக வெளியே வந்த நிர்மல் குமார் இரவு விஜயை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் கட்சியின் அடுத்த கட்ட பணிகளை விஜய் தொடங்குவார் என்று தெரிகிறது.
