தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று காலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை மதியம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது காலையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்து இருந்தது. ஆனால் காலையில் இருந்த விலையை விட இப்போது 640 அதிகரித்துள்ளது. தற்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,340-க்கும், ஒரு சவரன் ரூ.90,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு கவலை அளித்துள்ளது.
