பெண்களுக்கு மருதாணி வைப்பது ஒரு அழகுதான். ஆனால் இன்று கெமிக்கல் மருதாணியை தங்களுக்கு பிடித்த டிசைன்களில் வைத்து கொள்கின்றனர். அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மருதாணி இலைகளை பறித்து கைகளில் வைக்கும் போது அந்த அளவுக்கு சிவப்பது கிடையாது. மருதாணி நன்கு சிவக்க ஒரு வழி உள்ளது. அதாவது மருதாணி இலைகளை பறித்து சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் டீ தூள், ஒரு ஸ்பூன் காபித்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் டிகாஷனை வடிகட்டி ஆற வைக்க வேண்டும். இதனையடுத்து மருதாணி இலைகளை அரைக்கும் போது அரை ஸ்பூன் சர்க்கரை, பாதி அளவு கொட்டைப்பாக்கு, பாதி அளவு எலுமிச்சம் சாறு, 3 கிராம்பு, சிறிது புளி, நாம் தயாரித்து வைத்திருந்த டிகாஷன் சேர்த்து அரைத்து விட வேண்டும். அதனை உடனே வைக்காமல் அரை மணி நேரம் கழித்து கைகளில் வைத்து 2 மணி நேரம் உலரவிட்டால் மருதாணி நன்கு பிடித்திருக்கும்.
