கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காருக்கு வழிவிடாதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முதியவரை இளைஞர்கள் கொடூரமாக தாக்கி, வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆழிக்கலில் உள்ள முண்டாச்சலியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (77) என்பவர் இந்த தாக்குதலுக்கு ஆளானார். இந்த தாக்குதலின் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், இரண்டு இளைஞர்கள் முதியவரை அடித்து, தள்ளி, அறைந்து, அவரை திட்டுவதைக் காணலாம்.
కారు పార్కింగ్ విషయంలో 77 ఏళ్ల వృద్ధుడిని దారుణంగా కొట్టిన యువకులు
కేరళ – కన్నూర్లో ఘటన
వృద్ధుడి వెంటపడి కొడుతూ, చంపేస్తామని బెదిరించిన యువకులు
వృద్ధుడి ఫిర్యాదు మేరకు కేసు నమోదు చేసిన
వలపట్టణం పోలీసులు pic.twitter.com/Xl1WyaT5pX— Telugu Scribe (@TeluguScribe) October 8, 2025
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிவாஜி சாலையில் உள்ள அவரது வீட்டின் முன் நடந்ததாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணன் தனது காரில் அமர்ந்திருந்தபோது, இரண்டு இளைஞர்கள் தன்னை அணுகி, ஏதோ கேட்டு, தனது தலையின் பின்புறத்தில் அடித்ததாக கூறினார். அதற்கு எந்த காரணமும் இல்லை. தனது காரை வழியிலிருந்து நகர்த்தாதது தொடர்பான தகராறு இது என்பதை பின்னர் அவர் புரிந்துகொண்டார். “வேறு ஒரு கார் கடந்து செல்ல இடம் இருந்தது. அவர்கள் ஏன் என்னைத் தாக்கினார்கள் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை,” என்று பாதிக்கப்பட்ட முதியவரான பாலகிருஷ்ணன் கூறினார்.
