கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குந்துகோல் தாலுகாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.
அப்போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பச்சிளம் குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அந்த குழந்தையின் வயிற்றை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தனர். இது குறித்து கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகி கூறுகையில், பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரியவந்துள்ளது. முதுகெலும்புவுடன் கூடிய ஒரு கரு உள்ளது. தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துள்ளோம். அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம் எனவும் இது ஒரு அறிய நிகழ்வு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
