கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற வருகிறது. அதே சமயம் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு மன்னிப்பு கேட்டு விஜய் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது விஜயின் பரப்புரை வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை வழங்குமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
