தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த விஜய்க்கு நெருக்கமான நபர்கள் நேற்று ஆடிட்டர் குருமூர்த்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசியது பேசு பொருளாகியுள்ளது. கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை ஆணையமும் விஜய்க்கு நெருக்கடியாக மாறி உள்ளது.
திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு இடையே ஆன யுத்தத்தை கரூர் சம்பவம் மேலும் அழுத்தம் உண்டாக்கியுள்ள நிலையில் டெல்லி இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டத்தில் இறங்கியுள்ளது. கரூர் விபத்து நடந்த சில மணி நேரத்தில் தமிழக அரசிடம் இருந்து தன்னுடைய உள்துறை அமைச்சகம் மூலமாக அறிக்கைக்கு கேட்டார் அமித்ஷா. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தமிழக வெற்றி கழகம் அணுகும் முன்பாகவே இது நடந்தது. தொடர்ந்து ஆளுநரும் தமிழக அரசிடம் இந்த சம்பவம் பற்றி விவரங்களை கேட்டுள்ளார்.
இதரிடையே தேசிய மனித உரிமை ஆணையர் விவரங்களை கேட்க வேண்டும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் முன்னணி தலைவர்களில் ஒருவரும் பாஜகவில் முன்பு நிர்வாகியாக இருந்தவருமான நிர்மல் குமார் கோரிக்கை விடுத்தார். இதன் பின்னணியில் ஆடிட்டர் குரு மூர்த்தியுடன் ஆலோசனை செய்ய வேண்டும் என விஜய் தரப்புக்கு ஆலோசனை சொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. ஆடிட்டர் குருமூர்த்தியை விஜய் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் ஆனால் விஜய் அதற்கு தயங்கிய நிலையில் சந்திக்க தனது தரப்பினரை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தொடக்க முதலே தமிழக வெற்றி கழகம் கட்சியை கிடைக்க முயற்சித்தும் வந்தது. ஆனால் விஜய் திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து விமர்சித்து வருகின்றார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்க்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறது டெல்லி தலைமை.
